இதனை அடுத்து வினோத் பரமக்குடி நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு மனுதாரருக்கு ரூபாய் 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்துள்ளனர். இதனையடுத்து அரசு பேருந்தை ஜப்தி செய்ய பரமக்குடி சார்பு நீதிபதி சதீஷ் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்தனர். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.