ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலின் 85வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா இன்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. ஆண்டுதோறும் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தல், வேல் பூறுதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். அதன் துவக்கமாக இன்று காலை 6.17 மணிக்கு முதல் 6.58 மணிக்குள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் வேதவிற்பன்னர்கள் பூஜைகள் செய்து பங்குனி உத்திர பெருவிழா நிகழ்ச்சிக்கான கொடியேற்றத்துடன் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
கடனுக்கு பொருள் தர மறுத்த கடை ஓனரை தாக்கிய கஸ்டமர்