இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக 2 சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 945 கிலோ பீடி இலைகளை போலீசார் அதிகாலை பறிமுதல் செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம், சேதுக்கரை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சேதுக்கரை கடற்கரையில் அதிகாலை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 2 சரக்கு வாகனங்களில் சோதனை செய்தனர். 

அதில் 945 கிலோ பீடி இலை பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 சரக்கு வாகனங்களையும், அதிலிருந்த பீடி இலை பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி