ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா தொடங்கியது. முதல் நாள் இரவு, ராமநாதசுவாமி தங்க நந்திகேஸ்வரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த திருவிழா சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.