இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. பிப்ரவரி 7ஆம் தேதி வியாழக்கிழமை பூஜைகளுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து ராஜகோபுரத்தில் அமைந்துள்ள கும்பங்களில் ஊற்றி கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக பெருவிழாவில் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்