இன்று நான்காம் கால பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, மகா பூரணாகுதி தீபாதாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மங்கள இசை வாத்தியங்களுடன் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியிலிருந்து கடம் புறப்பாடு ஆலயம் சுற்றி வலம் சென்று ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ கருப்பணசுவாமி ஆலய விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது.இதில் காடமங்கலம், பெருநாழி, கமுதி, மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்