மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நிறைவடையவுள்ள நிலையில், மீனவர்கள் மீன் பிடிக்கத் தயாராகி வந்த நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடல் சீற்றம் குறைந்தவுடன் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படுவர் என மீன் வளத் துறையினர் தெரிவித்தனர்.
தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட படகு இறங்கு தளங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.