இந்நிலையில் சுற்றுலா வந்த காரியாபட்டி பகுதியை சேர்ந்த நாகூர்கனி மகன் முகம்மது சலாம் (16) என்ற மாணவன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை தள்ளி கடலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு மோதியதில் படுகாயம் அடைந்தான்.
இதைப்பார்த்த அவருடன் வந்தவர்கள் உடனே முகம்மது சலாமை கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வாலிநோக்கம் மெரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.