இதில் புதிய வடிவத்தில் உருவாக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டையை 23 கிளைகளுக்கு உட்பட்ட
செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மாவட்ட கழக செயலாளர் எம். ஏ. முனியசாமி பேசுகையில்: கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் கட்சியில் இளைஞர்களை சேர்க்க மூத்த நிர்வாகிகள் முன் வர வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளதாகவும், அதன்படி கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தான், கடலாடி யூனியன் சேர்மன் முனியசாமி பாண்டியன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் எஸ். டி. செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.