ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மீன்வளத்துறை சார்பாக நடைபெற்ற இந்த ஆய்வில், படகுகளின் உரிமம், காப்பீடு, இயந்திரத் திறன் மற்றும் பயணம் செய்ய ஏதுவான அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன.