மாநில அளவில் 2 பிரிவுகளாக நடைபெற்ற கால்பந்து போட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 07 ம் ஆண்டு சிறுவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியினை இந்தியன் சூப்பர் லீக் வீரர் மாயக்கண்ணன் துவக்கி வைத்தார். 

இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் என மாநிலம் முழுவதும் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 அணிகளும், 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 19 அணிகளும் கலந்து கொண்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

இறுதியில் பரமக்குடி மற்றும் மதுரை அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி