இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைக்கழக பேச்சாளர் கவிஞர். ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போழுது ஹிந்தி படிப்பதை நாங்கள் தடுக்கவில்லை, ஹிந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். எப்போதும் தமிழகத்திற்கு இருமொழிக்கொள்கையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம். முன்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பேசினார். மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் ஐம்பது லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது.
தற்போது மோடி தலைமையிலான ஆட்சியில் நூற்றி ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றதாக குறிப்பிட்டு மக்களை கடன்காரர்களாக மோடி ஆக்கியுள்ளார் என்றார். ஆளுநர் தேவையில்லாத வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சனாதனம் பற்றிப் பேசுவதாகவும் ஆளுநர் நமக்குத் தேவையில்லை என கூறினார். வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை ஒருகாலத்திலும் ஜெயிக்க முடியாது என கூற