தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஜி.எஸ்.மஹாலில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் 654 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 53.32 கோடி மதிப்பீட்டில் சுழல்நிதிக் கடன் திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ராமநாதபுரம் நகரமன்றத் தலைவர் கார்மேகம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.