அதனைத் தொடர்ந்து ஏராமான பக்தர்கள் ஸ்ரீ குருநாதசுவாமி கோவிலில் இருந்து பால் குடங்களை சுமந்து பம்மனேந்தல் கிராமத்தில் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் ஆலயத்தை பால்குடம் வந்தடைந்து. அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பக்தர்கள் ஒருவர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். சிறுவர்கள் தங்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வேப்பிலையை கையில் பிடித்து ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சகதியை உடலில் பூசிக் கொண்டால் தோல் நோய், அம்மை நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாது என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.