பாமக பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அன்புமணி தரப்பை சேர்ந்த வடிவேல் இராவணன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
நன்றி: நியூஸ் 18