சவுதி அரேபியாவில் இன்று (நவ.17) உயிரிழந்த 42 இந்தியர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வரவேண்டும். அத்துடன், நிவாரண உதவிகளை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். டீசல் டேங்கரில் பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.