மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அங்கீகரிக்கப்படாத கூடுதல் சுவையூட்டிகளை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுபானங்கள் தயாரிக்கப்பட்ட காலம் தொடர்பான தவறான தகவல்கள் இடம்பெற்றது தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ரம் மற்றும் பிராண்டி போன்ற மதுபானங்களில், அங்கீகரிக்கப்படாத முறையில் சுவையூட்டிகளை பயன்படுத்தி விதிமீறல் நடந்துள்ளதை FSSAI கண்டறிந்துள்ளது.