புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த புதுச்சேரி டிஜிபி அனுமதி மறுத்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து அனுமதி கோரினார். அவரும் அனுமதி மறுத்த நிலையில் இன்று (டிச.03) இரண்டாவது முறையாக மீண்டும் புதுச்சேரி முதல்வரை சந்தித்துள்ளார். இதற்கிடையே ஜய் மக்கள் சந்திப்பை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.