இலுப்பூர் தாலுகா நார்த்தாமலை அருகே உள்ள சித்துப்பட்டி கிராமத்துக்குள் நேற்று காட்டெருமைகள் புகுந்து உலா வந்தன. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர், காட்டெருமைகளை பத்திரமாக மீட்டு அடர்ந்த காட்டுக்குள் அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.