புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருத்தேரோட்ட விழா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர் முகமது பர்வேஸ் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.