முக்கண்ணாமலைப்பட்டி பள்ளிவாசல்களில் ரமலான் மாத சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இஸ்லாமியர்களின் வழக்கப்படி, ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுவர். வானில் தோன்றும் பிறையை அடிப்படையாகக் கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படுகிறது. இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.