புதுகை: மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது 21 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். நேற்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து இலுப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி