புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த சுலிக்கிபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (58). இவர் மலைக்குடிப்பட்டி ஜவுளி கடை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டிவந்த தமிழரசன் (22) என்பவர் மோதியதில் கருப்பையாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் இலுப்பூர் போலீசார் தமிழரசன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.