புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் அருகே நேற்று மூர்த்தி (53) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.