புதுக்கோட்டை, இலுப்பூர் அடுத்த பொதியம்பட்டியைச் சேர்ந்தவர் மாரி (65). இவர் இலுப்பூர் ராஜாகுளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த நீலமேகம் (21), அவர் மீது மோதியதில் மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் நீலமேகம்மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.