திருமயம்: திருமயம் அருகே உள்ள கோனா பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (45). விவசாயி. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குடும்பத்தகராறு காரணமாக இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த பெருமாள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். மதுபோதையில் நேற்றுமுன்தினம் (மார்ச்.15) வீட்டின் அருகே உள்ள பலாமரத்தில் தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.