திருமயம்: போலி பயிர் காப்பீடு-ரூ. 40, 000 மோசடி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த பிச்சையம்மாள் (45) என்பவரின் வங்கிக் கணக்கில் திடீரென 40 ஆயிரம் ரூபாய் வரவு வந்துள்ளது. வங்கி ஊழியர்கள் இது பயிர் காப்பீடு தொகை எனத் தெரிவித்துள்ளனர். தனக்கு நிலமே இல்லாத நிலையில், தனது பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிச்சையம்மாள் திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி