புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரங்கிணாம் பட்டியை சேர்ந்தவர் கணேசன் (65). விவசாயி. நேற்று காலை குளிப்பதற்காக அருகே உள்ள மலையடிக் குளத்துக்குச் சென்றார். அப்போது வலிப்பு நோய் ஏற்பட்டதால், தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.