புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகர் பகுதியில் உள்ள 15 வார்டு பொதுமக்களுக்கும், 5 தனியார் விடுதிகளிலும் திமுக சார்பில் விடியல் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு விடுதியில் பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினார். பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.