புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (பிப். 07) நடைபெற்ற மேலாண்மைக் குழு கூட்டத்தில், இடைநிலை ஆசிரியர் மெர்சி மாணவர்களுக்கு ரூ. 5000 மதிப்பிலான தட்டு மற்றும் டம்ளர்களை வழங்கினார். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உஷா மாணவர்களுக்கு 5 பாய்களை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வு பள்ளியின் மேம்பாட்டிற்கான ஒரு பகுதியாக நடைபெற்றது.