புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாப்பட்டியில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் புனித நீர் குடங்களுக்கு சக்தி ஊட்டப்பட்டு, கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து பரவசமடைந்தனர்.