நாயகி அம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயமானது சிறிய மாடு, பெரியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் 9ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 17ஜோடிகளும் கலந்து கொண்டனர். பெரிய மாட்டு வண்டிக்கு 12கிலோ மீட்டரும் சிறிய மாட்டு வண்டிக்கு 9 கிலோமீட்டர் எல்கை நிர்ணயிக்கப்பட்டு போட்டியான நடைபெற்றது.
சாலையில் துள்ளிக்குதித்து போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.