புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த கீழப்பனையூர் ஆர்ச் அருகே நேற்று தர்மலிங்கம் (38) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரிமளம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.