புதுக்கோட்டை மறவபட்டி சாலையில் முருகேசன்(51) என்பவர் பைக்கில் சென்றபோது, பன்றி குறுக்கே வந்ததால் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சத்யா அளித்த புகாரின்பேரில், திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.