புதுக்கோட்டை: திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஏ. செட்டிபட்டியில் காமன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது. 

பெரிய மாட்டுவண்டியில் 4 ஜோடிகளும் சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் 12 ஜோடிகளும் கலந்துகொண்டனர். பெரிய மாட்டுவண்டிக்கு போகவர 12 கிலோமீட்டரும் சிறிய மாட்டுவண்டிக்கு போகவர 9 கிலோமீட்டர் எல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. சாலையில் துள்ளிக்குதித்து போட்டிபோட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை சாலை நெடுகிலும் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டிவந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி