புதுக்கோட்டை: சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா உப்பிலிக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவர் புதுக்கோட்டை பழனியப்பா கார்னரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 27 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி