இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதியிலிருந்து 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த போட்டியை தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலதுறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதற்கு முன்பு ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டனர்.