காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் கேலரி, தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வாடிவாசல் அமைக்குமாறு உத்தரவிட்டார். டிஆர்ஓ செல்வி, ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் ராமசாமி, கந்தர்வகோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்தி, ஊராட்சி தலைவர் ராணி ஆகியோர் உடனிருந்தனர்.