பேருந்து சேவை வேண்டி மாணவர்கள் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மங்கனுார் கிராமத்தில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாலை நேரங்களில் பேருந்து வசதி இல்லாததால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். தஞ்சை, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஊர்களுக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்கள், மாலை நேரங்களில் பேருந்து சேவை அமைத்து தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் மாணவர்களின் நலன் கருதி பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி