விசாரணையில், தஞ்சை மாவட்டம் குருங்குளத்தை சேர்ந்த ராமையன் மகன் ராமச்சந்திரன்(18), புண்ணியமூர்த்தி மகன் அறிவழகன்(20), தஞ்சாவூர் கருக்காவயல் காமாட்சி மகன் செல்வம் (23) என்பதும், கந்தர்வகோட்டை அருகே உள்ள நாட்டானி, கல்லுப்பட்டி வளவம்பட்டி ஆகிய இடங்களில் முகமூடி அணிந்து அந்த வழியாக வந் தவர்களிடம் ஆயுதங்களை காண்பித்து மிரட்டி பணம், நகை, செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி