புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.