கீரனூரிலிருந்து குளத்தூருக்கு பைக்கில் சென்ற சவரிமுத்து(42) என்பவர், கீரனூர் சாலையை கடக்க முயன்றபோது, புகழேந்தி(45) ஓட்டி வந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி, அதிலிருந்த கம்பி சவரிமுத்து தலையில் பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.