கந்தர்வகோட்டை முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ் (24). இவர் நேற்று (பிப்.13) இரவு குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.