புதுக்கோட்டை மறமடக்கியில் பேசிய கார்த்திக் சிதம்பரம் எம். பி. , திரைப்படத் தணிக்கை விவகாரங்களில் மேல்முறையீடு செய்யும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது என்றும், மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 'ஜனநாயகன்' படத்துக்கான தணிக்கைச் சான்றில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், மீண்டும் மேல்முறையீடு செய்வது உள்நோக்கமுள்ளதாக அவர் விமர்சித்தார்.