மணமேல்குடி அடுத்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரி ராமகிருஷ்ணன்(38) என்பவர், குடும்பச் சண்டை காரணமாக தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால், நேற்று தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி 5 வருடங்களாகிறது, மேலும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.