புதுக்கோட்டை: 35 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

துரையரசபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(56) என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு தோட்டத்தில் மருந்து அடிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி