புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், உப்பளம் அருகில் கிழக்கு கடற்கரை சாலை அரசங்கரைப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.