புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டிக்கு நேற்று பைக்கில் சென்ற கருப்பையா(47) என்பவர், அறந்தாங்கி செக்போஸ்ட் அருகே காரில் வந்த விக்னேஷ்(29) மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி இந்திரா(45) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.