புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மளிகை கடையில் நேற்று அழகர் (32) என்பவர் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 140 கிராம் குட்கா பொருட்களும், ரூ. 690 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.