புதுக்கோட்டை மாநகராட்சி பாலன்நகர் செட்டியார் வயல் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை இன்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.